மாகாணத்தினுள் அரச காணிகளை இனங்காணுதல், மற்றும் அவற்றினைப் பாதுகாக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு இனங்காணப்பட்ட அரச காணிகளை மிகவும் பயனுள்ள விடயங்களுக்காக விடுவித்தல் , விடுவிக்கப்பட்ட காணிகளின் மீள்பார்வை நடவடிக்கை, மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவது மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.
பதின் மூன்றாவது அரசியலமைப்பின் திருத்தத்திற்கு இணங்க மாகாண சபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள காணி அதிகாரங்களுக்கு இணங்க மாகாணத்தினுள் அரச காணிகளின் முகாமைத்துவம், மற்றும் நிர்வாகம் செய்வதற்காக மேல் மாகாணத்தின் காணி ஆணையாளர் திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.